பாஜக வேட்பாளர் இமார்டி தேவி தேர்தல் பிரச்சாரத்தின் போது எதிர் வேட்பாளரை பைத்தியம் என அவமரியாதையாக பேசியதற்கு தேர்தல் ஆணையம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
மத்திய பிரதேசத்தில் நடைபெற்று வரும் இடைத்தேர்தலில் தேர்தல் பிரச்சாரத்தின் போது எதிர் வேட்பாளரின் குடும்ப உறுப்பினர்களுக்கு எதிராக கருத்துகளை தெரிவித்ததாக எதிர்ப்புகள் எழுந்தது. அதனை தொடர்ந்து அவருக்கு பேச தெரியாது. அவர் தலைமை பதவியில் இருந்து இறக்கிய பிறகு பைத்தியம் பிடித்து விடும் என பேசியுள்ளார். இதனால், அவர் மீது எதிர்ப்புகள் எழுந்த நிலையில் தேர்தல் ஆணையம் அவருடன் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதற்கான விளக்கத்தை 48 மணி நேரத்தில் அளிக்க வேண்டும். இல்லையெனில் தேர்தல் ஆணையம் வேறு மாதிரியான முடிவுகளை எடுக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.